• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேலம் அருகே முத்தூட் மினி வங்கியில் 730 சவரன் நகை கொள்ளை

August 16, 2016 தண்டோரா குழு

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியில் கேரள மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மினி வங்கி என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நகைக்கடன் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த வங்கி நேற்றும் நேற்று முன்தினமும் விடுமுறை என்பதால் பூட்டியிருந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வங்கியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று அடமானம் வைக்கப்பட்டிருந்த சுமார் 730 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பின்னர் காலை தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆத்தூர் டி.எஸ்.பி நமச்சிவாயம், சங்ககிரி டி.எஸ்.பி கந்தசாமி, வாழப்பாடி டி.எஸ்.பி சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

மேலும் படிக்க