• Download mobile app
26 May 2026, TuesdayEdition - 3758
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பழைய ரூ.500,1௦௦௦ செல்லும் டிசம்பர் 2 வரை மட்டுமே – மத்திய அரசு

December 1, 2016 தண்டோரா குழு

பழைய ரூ.500,1௦௦௦ நோட்டுகள் டிசம்பர் 2 வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் செல்லும் என்றும் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி நவம்பர் 8 ம் தேதி ரூ. 500,1௦௦௦ நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதையடுத்து, டிசம்பர் மாதம் இறுதிக்குள் வங்கிகளில் பழைய கரன்சியை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது .

எனினும் மக்களின் அன்றாட தேவைகளுக்காக பெட்ரோல் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும், மின்சாரக் கட்டணம் செலுத்தவும் நவம்பர் 24 ம் தேதி வரை பழைய ரூ. 500,1௦௦௦ நோட்டுகளைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்திருந்தது.

இந்நில்லையில் டிசம்பர் 15 வரை பெட்ரோல் நிலையங்களில் ரூபாய் நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும் என மத்திய அரசு கால அவகாசத்தை நீடித்து அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது டிசம்பர் 2 மட்டுமே பெட்ரோல் வழங்கு நிலையங்களில் ரூபாய் நோட்டுகளைச் செலுத்தலாம் என வியாழக்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது:

பெட்ரோல் வழங்கும் நிலையங்களில் டிசம்பர் 2-ம் தேதி வரை மட்டுமே ரூ.500 ,1௦௦௦ நோட்டு பெற்றுக் கொள்ளப்படும். விமான பயணங்களுக்கும் 2-ம் தேதி இரவு வரை மட்டுமே பழைய நோட்டுகளைப் பயன்படுத்தி டிக்கெட் எடுத்து கொள்ளலாம்.

அதே போல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சில்லறை தருவதில் சிக்கல் ஏற்பட்டதால் நவம்பர் 11-ம் தேதி வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க