• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுதந்திரத்திற்காக ஆர்.எஸ்.எஸ் எதுவும் செய்யவில்லை நடிகை ரம்யா காமெடிப் பேச்சு

September 1, 2016 தண்டோரா குழு

இந்திய சுதந்திரத்திற்காக ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யவில்லை என்றும்,ஆங்கிலேயர்களின் பக்கம் இருந்து செயல்பட்டதாகவும் முன்னாள் எம்.பியும் நடிகையுமான ரம்யா தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரம்யா,அண்மையில் அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று பாகிஸ்தான் நரக தேசம் அல்ல.நல்ல நாடாகவே இருக்கிறது என்று கூறியிருந்தார்.இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும்,வழக்கறிஞர் ஒருவர்,ரம்யா மீது தேசதுரோக வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில்,நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரம்யா,சுதந்திரப் போராட்டத்தின் போது, ஆர்.எஸ்.எஸ். ஆங்கிலேயர்களுடன் கை கோர்த்திருந்ததாகவும்,காங்கிரஸ்,மட்டுமே போராடியதாகவும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய பா.ஜ.க வினர், ரம்யா விளம்பரத்திற்காகப் பேசுவதையும்,வரலாறு தெரியாமல் பேசுவதையும் விட்டுவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்கவேண்டும் எனக் கூறியுள்ளனர்.மேலும் ஆர்.எஸ்.எஸ் என்பதே சுதந்திரத்திற்குப் பின் உருவான அமைப்பு, அவர்கள் எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சாதகமாக நடந்திருக்க முடியும், இது சிறுபிள்ளைத்தனமானது எனக் கிண்டலடித்துள்ளனர்.

அதே சமயம்,கர்நாடக கட்சியினர்,சமீபகாலமாகக் கட்சியிலும்,பொதுமக்களிடமும் தன்னுடைய செல்வாக்கு சரிந்து வருவதை மீட்டெடுக்கவே இது போன்ற லாஜிக் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க