• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராகுல் காந்தியின் டுவிட்டர் முடக்கம்?

December 1, 2016 தண்டோரா குழு

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் புதன்கிழமை (நவம்பர் 3௦) இரவு ஆபாச வார்த்தைகளால் பதிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவு 8:30 மணியளவில் மர்ம நபர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஊருடுவி எட்டு ஆபாச பதிவுகளைப் பதிவேறியுள்ளனர். அந்தப் பதிவுகள் ஒரு மணி நேரத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், அதைத் தொடர்ந்து புதிய பதிவுகள் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.

ஊருடுவிய மர்ம நபர்கள் ராகுல் காந்தியின் புகைப்படத்தை நீக்கிவிட்டனர். அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @OfficeOfRG என்பதற்குப் பதிலாக ஆபாசமானதை மாற்றியுள்ளனர். அவருடைய ட்விட்டர் கணக்கு மீண்டும் சரி செயப்பட்டு ஆபாசமானவை எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சூர்ஜெவாலா கூறியதாவது:

எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் விவேகமான குரலை அழுத்தவோ மக்கள் பிரச்சினைகளை அவர் தைரியமாக எழுப்புவதை இத்தகைய கீழ்த்தரமான தந்திரங்கள் மூலம் நிறுத்தவோ யாராலும் முடியாது. இத்தகைய, நேர்மையற்ற நியாயமற்ற மற்றும் போக்கிரித்தனமான செயல் பொதுவுடைமை எதிர்ப்புக் கொள்கை கொண்டவர்களின் குழப்பமான. பாதுகாப்பற்ற முறையைத்தான் பிரதிபலிக்கிறது என்றார் ரந்தீப் சூர்ஜேவாலா.

இதையடுத்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவில் புகார் அளிக்கபடும் என்று காங்கிரஸ் ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரணவ் ஜா தெரிவித்தார்.

மேலும் படிக்க