• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேட்மேன் படத்தை முதலில் இயக்க நினைத்த தமிழ் இயக்குநர் யார் தெரியுமா?

December 20, 2017 தண்டோரா குழு

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தக் கூடிய நாப்கினை குறைந்த விலையில் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் உலக அளவில் புகழ் பெற்ற கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். நாப்கின்கள் வாங்க முடியாமல் பழைய முறைப்படி சுகாதாரம் இல்லாதவற்றை பயன்படுத்திய பெண்களுக்கு அருணாச்சலத்தின் கண்டுபிடிப்பு ஒரு வரப் பிரசாதம்.

உலக அளவில் புகழ்பெற்ற இவரின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட்மேன்.ஆர்.பால்கி இயக்கத்தில் நடிகையும் அக்ஷய் குமாரின் மனைவியுமான டுவிங்கிள் கண்ணா தயாரித்துள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் கோவை போஸ்ட் இணையதள பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அருணாச்சலம் முருகானந்தம்,

ஆரம்பத்தில் என் வாழ்கையை மையமாக வைத்து படமெடுக்க இயக்குநர் வெற்றிமாறன் என்னை அணுகினார். அப்போது அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. எனினும் நான் ஹாலிவுட்டில் என் வாழ்க்கை தொடர்பான படம் உருவானால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் தமிழில் என் கதை உருவாவதை அந்த சமயத்தில் தள்ளி வைத்தேன்.

ஆனால்,டுவிங்கிள் கண்ணா சுமார் இரண்டரை வருடங்கள் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு படம் எடுப்பது குறித்து பேசினார். ஒருமுறை லண்டனில் அவரை நேரில் சந்தித்தேன் அப்போது அவரது ஆர்வத்தை அணுகுமுறையையும் கண்டு நான் ஒப்புக்கொண்டேன்.விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
மேலும், என் வாழ்க்கையை மையாமாக வைத்து ஹாலிவுட்டிலும் படம் எடுக்க முடிவுவாகியுள்ளது. விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

மேலும் படிக்க