• Download mobile app
15 May 2026, FridayEdition - 3747
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புது டெல்லியில் பெண் மருத்துவர் தற்கொலை

September 17, 2016 தண்டோரா குழு

புது டெல்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் ஒருவர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷ ஊசியை பயன்படுத்தி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

புது டெல்லியில் உள்ள கிழக்கு பகுதி ஐ.பி. விரிவாக்கம் குர்மஞ்சால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரஜேஷ். அவருடைய மனைவி டாக்டர் ரித்து பங்கோட்டி(30). அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர், தனக்குத்தானே விஷ ஊசி போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவருக்கும் ஏர் இந்திய விமான ஓட்டுனராக இருக்கும் அவருடைய கணவர் பிரஜேசுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்ததாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

டாக்டர் ரித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவருடைய உடலுக்கு அருகே ரித்து தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது.

மேலும், அவருடைய கணவரை கைது செய்து அவரிடம் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ரித்துவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் டெல்லி டிசிபி ரிஷிபால் தெரிவித்தார்.

மேலும் படிக்க