• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்

August 9, 2016 தண்டோரா குழு

மலைவாழ் பழங்குடி கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமான சத்தீஸ்கரில் உள்ள சில மலை கிராமங்கள் இன்னும் வெளி உலகுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளன.

அந்தக் கிராமங்களில் வாழும் மக்கள் மருத்துவமனைக்குப் பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை. ஒரு அவசர நேரத்திற்கு உடனே செல்ல முடியாத நிலை வேறு அங்கு உள்ளது.

அவசரக் காலத்தில் ஆம்புலன்ஸ் உடன் தொடர்பு கொண்டு நோயாளிகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் அங்கு அதிகமாகப் பாதிக்கப்படுவது கர்ப்பிணிப் பெண்கள் தான்.

அதனால் மாநில சுகாதாரத்துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கர்ப்பிணி பெண்களைக் குறுகிய மலைப்பாதைகளில் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியும். இத்திட்டத்தால் சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பயன் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க