• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் பருவமழை தொடக்கம் – வானிலை இயக்குநர்

October 31, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்துள்ளது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகம், புதுவையில் சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகம், கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் சில இடங்களில் 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், உடுமலை, வாடிப்பட்டியில் 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பொள்ளாச்சியில் 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது” என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க