• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவுக்கு எம்.எல்.ஏ.க்கள் – தனியரசு, கருணாஸ், அன்சாரி கண்டனம்

January 12, 2018 தண்டோரா குழு

வைரமுத்து முத்து குறித்து இழிவாக பேசிய எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆண்டாள் குறித்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து தவறான கருத்து தெரிவித்தாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து பல்வேறு இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கவிஞர் வைரமுத்துவை கடுமையாக சாடினார்.

இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் கருணாஸ், அன்சாரி, தனியரசு ஆகியோர் தனது கேவலமான கருத்துக்கு ஹெச்.ராஜா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து தமிழ் சமூகத்தின் முகவரி என்பதை மறந்து விட வேண்டாம்.

”கவிஞர் வைரமுத்துவை ஹெச்.ராஜா தரம் தாழ்ந்த சொற்களால் இழிவுப்படுத்தியுள்ளார்.சம்பந்தமே இல்லாமல், நபிகள் நாயகத்தையும், அவர்களின் மனைவியரையும் இழிவுப்படுத்தியும், பொது அமைதியும் கெடுக்கும் வகையில் பேசியுள்ளார்.இதை வன்மையாக கண்டிக்கின்றோம்.” என கூறியுள்ளனர்.

மேலும் படிக்க