• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் ஜெயக்குமாரின் கண்டனத்திற்கு ஆடிட்டர் குருமூர்த்தியின் பதில்

December 26, 2017 தண்டோரா குழு

ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெய்குமாருக்கு அவர் பதிலளித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் பழனிச்சாயும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆண்மையற்றவர்கள் என ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், அவதூறு கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறும்போது, அமைச்சர்கள் அனைவரும் காங்கேயம் காளை போல உள்ளனர்.ஆடிட்டர் குருமூர்த்தி என்ன கிங் மேக்கரா? எதற்கும் ஒரு எல்லை உண்டு. குருமூர்த்தி மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும் அதிமுக கொதித்தெழுந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தடித்த வார்த்தை கூற கூடாது, அப்படி இல்லையென்றால் நாங்கள் நூறு வார்த்தை சொல்வோம் எனவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இதையடுத்து, அமைச்சர் கண்டனத்துக்கு பதிலளித்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தி தமிழக அரசை நான் இயக்கவில்லை என தெளிவு படுத்திய அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்துவேன் என்றும் அதிமுக தலைமை பலவீனமானது என்பதை நான் இப்போது புதிதாக கூறவில்லை அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க