• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி அருகே செல்போன் பேச்சால் வந்தவினை, மனைவி தற்கொலை

August 26, 2016 தண்டோரா குழு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகேயுள்ள ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செந்தில். இவரும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா(26) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி செல்போன் பேசுவது குறித்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் மீண்டும் செல்போனில் பேசி கொண்டிருந்த தனது மனைவியிடம் யாரிடம்
போன் பேசுகிறாய் எனச் செந்தில் தகராறு செய்துள்ளார்.

இதனால் மனமுடைந்த சந்தியா, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை
மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து செந்திலை தேடிவருகின்றனர்.

மேலும், குருபரப்பள்ளி அருகேயுள்ள பீமாண்டப்பள்ளியை சேர்ந்த எல்லப்பன் மகன் அறிவழகன்(19). இவர் டிரைவர் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இவர் கடந்த 20 நாட்களாக வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது அம்மாவிடம் வெளியில் சென்றுவருவதாக கூறிச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்த போது கொள்ளப்பள்ளி ஏரி அருகேயுள்ள வேப்பமரத்தில் அறிவழகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் குருபரப்பள்ளி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து குருபரப்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க