• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படியில் நின்றவரை இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுனருக்கு அடி

August 5, 2016 தண்டோரா குழு

நேற்று மாலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து புல்வாய் கரைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அதில் படியில் பயணம் செய்த ஒருவரை ஓட்டுனர் சேகரன் திட்டி கீழே இறக்கிவிட்டு விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை புல்வாய் கரையில் இருந்து நாங்கூர் நோக்கி வந்த பேருந்தை ஒட்டி வந்த டிரைவர் சேகரனை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் ராமசுப்ரமணி ஓட்டுனரை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து மதுரை தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க