• Download mobile app
18 Apr 2026, SaturdayEdition - 3720
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படியில் நின்றவரை இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுனருக்கு அடி

August 5, 2016 தண்டோரா குழு

நேற்று மாலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து புல்வாய் கரைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அதில் படியில் பயணம் செய்த ஒருவரை ஓட்டுனர் சேகரன் திட்டி கீழே இறக்கிவிட்டு விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை புல்வாய் கரையில் இருந்து நாங்கூர் நோக்கி வந்த பேருந்தை ஒட்டி வந்த டிரைவர் சேகரனை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் ராமசுப்ரமணி ஓட்டுனரை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து மதுரை தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க