• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகாந்திரம் இருந்தால் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யலாம் – உயர் நீதிமன்றம்

November 24, 2017

இந்து தீவிரவாதம் விவகாரத்தில் கமல் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் சென்னை போலீஸ் கமிஷனர் வழக்குப்பதியலாம் என உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

வார இதழ் ஒன்றில் நடிகர் கமலஹாசன் இந்துக்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்.இதனால் இந்து தீவிரவாதம் என பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது தேச துரோக வழக்‍குப்பதிவு செய்யக்‍கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜ் என்பவர் மனு தாக்‍கல் செய்தார்.

இந்து மக்‍களுக்‍கு எதிராக கமல்ஹாசன் தெரிவித்திருந்த கருத்து, இந்துக்‍களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தீவிரவாதம் என கமல்ஹாசன் கட்டுரை எழுதிய விவகாரத்தில், விசாரணை நடத்தி ஆதாரமிருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க