• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரம் மருத்துவமனையில் ஜெ தீவிர ஆலோசனை

September 27, 2016 தண்டோரா குழு

காவரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து மருத்துவமனையில் இருந்தபடியே உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார் முதல்வர் ஜெயலலிதா.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மீண்டும் 3 நாட்கள் வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலவர் ஜெயலலிதா உடல் நலம் குறித்த பல்வேறு வதந்திகளுக்கு இடையே இன்று காவிரி நீர் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோஹன ராவ், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க