• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் போல் மினி ஐபிஎல் பிசிசிஐ அறிவிப்பு.

June 24, 2016 தண்டோரா குழு

சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குப் பதிலாக மினி ஐபிஎல் போட்டியை தொடங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

உலக அளவில் உள்ள முக்கிய கிரிக்கெட் கிளப்புகளை கொண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டி கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. இருப்பினும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லாததால் மாற்று ஏற்பாடாக வேறொரு போட்டியை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி செப்டம்பர் மாதம் மினி ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ தற்போது முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில், ஐபிஎல் போட்டியை போல் மினி ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இப்போட்டி ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும், தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் இதில் பங்கேற்கும் எனவும், இந்தத் தொடர் அயல்நாட்டில் நடைபெறும் அமெரிக்கா, அல்லது யு.ஏ.இயில் இந்த மினி ஐபிஎல் தொடர் நடைபெறலாம் எனவும்
பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சையத் முஷ்டாக் அலி டி20 உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்குப் பதிலாக மண்டல அணிகள் அடிப்படையிலான டி20 தொடர் நடத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க