• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் போட்டிகள் துவங்கும் நேரம் மாற்றம்

May 9, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் தொடரின் பிளே ஆப் மற்றும் பைனல் போட்டிகள் தொடங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது.இதில்,சென்னை,மும்பை,ராஜஸ்தான்,டெல்லி,ஹைதராபாத்,கொல்கத்தா, பஞ்சாப்,பெங்களூரு என 8 அணிகள் விளையாடி வருகின்றன.ஐபிஎல் போட்டிகள் தினமும் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.சில நேரங்களில் மழையால் போட்டிகள் தாமதாமாக முடிகிறது.இதனால் ரசிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில்,ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறுகையில்,

“ஐபிஎல் போட்டியை நேரடியாகவோ அல்லது டிவியிலேயோ பார்க்கும் ரசிகர்கள் தாமதமாக முடிவதால் பாதிக்கப்படுகின்றனர்.போட்டி தாமதமாக முடிவதால் மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அடுத்த நாள் பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.இதனால்,பிளே ஆப் மற்றும் பைனல் போட்டிகள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7 மணிக்கு துவங்கும் என்றார்.அதன்படி முதல் தகுதி சுற்று மே 22(மும்பை),எலிமினேட்டர் மே 23 (கொல்கத்தா),இரண்டாவது தகுதி சுற்று மே 25(கொல்கத்தா),பைனல் மே 27(மும்பை) ஆகிய போட்டிகள் இரவு 7 மணிக்கு துவங்கும்”.

மேலும் படிக்க