• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தோனேசியாவில் 16 பேருடன் சென்ற விமானம் மாயம்

December 3, 2016 தண்டோரா குழு

இந்தோனேசியாவில் 16 பேருடன் சென்ற போலீஸ் விமானம் மாயமானதாக அஞ்சப்படுகிறது. தகவல் தொடர்பு எல்லையிலிருந்து திடீரென்று அது விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் ஜகர்தாவிலிருந்து 16 போலீஸ்காரர்களுடன் புறப்பட்ட அந்த விமானம் மேற்கு இந்தோனேசியா பதாம் தீவு அருகில் சென்றபோது அதன் தகவல் தொடர்பு இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.

அந்த பங்க்கா தீவிலிருந்து புறப்பட்ட 50 நிமிடத்தில் தொடர்பிலிருந்து வெளியேறியது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது, எங்கு சென்றது என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என இந்தோனேசிய மீட்புக் குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விமானம் மாயமான இடத்தில் தேசிய மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 16 பேருடன் சென்ற போலீஸ் விமானம் திடீரென்று மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க