• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் உச்சரிப்பு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய சிறுமி.

July 2, 2016 தண்டோரா குழு

அமெரிக்காவில் வருடந்தோறும் நடைபெற்று வரும் போட்டியான தேசிய சொற்கள் உச்சரிப்பு போட்டியில் 14 வயதுடைய சினிக்தா நந்திபதி என்னும் சிறுமி வெற்றி பெற்றார்.

வாஷிங்கடனில் நடைபெற்ற 85வது தேசிய சொற்கள் உச்சரிப்பு போட்டியில் நாடு முழுவதிலிருந்தும் சுமார் 278 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் நடந்த அரை இறுதிச் சுற்றில் 10 முதல் 14 வயதுடைய 50 பேர் இறுதிப் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் அமெரிக்கா, சான்டியாகோவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சினிக்தா, குட்டாபென்ஸ் என்னும் பிரஞ்சு மொழி சொல்லை சரியாக உச்சரித்ததன் மூலம் தேசிய உச்சரிப்பு போட்டியின் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார்.

முதல் நிலை வெற்றியாளரான சினிக்தாவுக்கு 30,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையும், வெற்றிக்கோப்பையும் பரிசுகளாகக் கிடைத்தன. இதைவிட 2,500 டாலர் சேமிப்பு பத்திரமும் 5,000 டாலர் சம்பளமும் கிடைத்தன.

இறுதிச் சுற்றில் சாம்பியானதைப் பற்றிக் கேட்ட போது, இது ஒரு அற்புதம் என்று வர்ணித்ததோடு தனக்கு பரிசாகக் கிடைத்த 30,000 டாலரை தன் கல்லூரி படிப்புக்காக சேமித்து வைக்கப் போவதாக சினிக்தா தெரிவித்தார்.

இதேபோல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயதுடைய ஸ்ருதி மிஷ்ரா, மற்றும் 12 வயது அர்விந்த் மஹன்கலி ஆகியோரும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றால் நிலை வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

என்சைக்ளோபீடியாவை பொழுதுபோக்குக்காக வாசித்து வரும் பழக்கம் கொண்டவரான சினிக்தா மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போதே இப்போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்துள்ளார்.

சினிக்தா நந்திபதி இப்போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து சினிக்தாவின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். சென்ற ஆண்டு போட்டியில் கூட 14 வயதான சுகன்யா ராய் என்னும் இந்திய வம்சாவளிச் சிறுமி வெற்றி பெற்றிருந்தார். இவ்வாறு தொடர்ந்து இந்திய வம்சாவளிச் சிறுவர்கள் 5 முறை இப்போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க