• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தில்லியில் கடுமையான பனிமூட்டம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு

December 17, 2016 தண்டோரா குழு

தில்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக 12 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என தில்லி ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
கடந்த சில நாட்களாகவே தில்லியில், வட மாநிலங்களில் நிலவி வரும் பனி மூட்டம் காரணமாக விமானம், ரயில், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில், சனிக்கிழமை தில்லியில் நிலவிய பனிமூட்டம் காரணமாக 56 ரயில்கள் தாமதமாக பயணித்துள்ளது.

பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முகப்பு விளக்கு எரிந்தவாறே மக்கள் ஒட்டி செல்கின்றனர்.

இது குறித்து தில்லி வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக தலைநகர் தில்லியில் 400 மீட்டர் தொலைவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. இதனால் சாலைகளை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் கணக்கிடப்பட்ட வானிலை தகவலின்படி, வளிமண்டலத்தில் ஈரப்பதத்தின் அளவு 92% உள்ளது. வெப்பத்தின் அளவு 8.2 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இன்னும் சில தினங்கள் வானம் தெளிவாக காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க