• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ். நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்ற திருச்சி பெண்

August 3, 2016 தண்டோரா குழு

செர்பியா நாட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 2016 ஆம் ஆண்டுக்கான 16-வது உலக செஸ் போட்டியில், இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இதில் இந்திய சார்பில் திருச்சியைச் சேர்ந்த ஜெனித்தா ஆண்டோ என்பவர் கலந்து கொண்டார்.

இந்தப் போட்டியில் தனது முழு திறமையையும் காட்டிய அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதன்மூலம் உலகளவிலான போட்டிகளில் நான்காவது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து திருச்சி திரும்பிய அவரை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் அவருக்குப் பூங்கொத்துகள் கொடுத்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெனித்தா ஆண்டோ, ஊனமுற்றோருக்கான உலக செஸ் போட்டியில், 4வது முறையாகத் தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த மாதம் அஜர்பெய்ஜானில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க