• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சரியான பாதையில் தான் அரசு செல்கிறது – அருண் ஜேட்லி

November 24, 2016 தண்டோரா குழு

“ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்திலும் மத்திய அரசு சரியான வழியில் சென்று கொண்டிருகிறது” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் மக்கள் கடும் பணத்தட்டுப்பாட்டால் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

வங்கியில் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற போதும் பணம்பெற முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், “மத்திய அரசு சரியான பாதையில்தான் செல்கிறது” என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அருண் ஜேட்லி வியாழக்கிழமை பேசியதாவது:

ரூபாய் நோட்டு செல்லாது நடவடிக்கையில் மத்திய அரசு சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை முட்டாள் தனம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. “2 ஜி பிரச்சனையும் இதுவும் ஒன்று” என எதிர்க்கட்சியினர் கருதுகிறார்கள்.

ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.

மேலும் படிக்க