• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கன்னட எழுத்தாளர் குவெம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு டூடுல்

December 29, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் நாவல் எழுத்தாளர், குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவின் 113வது பிறந்தநாளையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

கர்நாடாக மாநிலத்தை சேர்ந்தவர் குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவை ‘குவெம்பு’ என்று அழைப்பர். புகழ்பெற்ற கவிஞர், நாடக ஆசிரியர், நாவல் எழுத்தாளர், மற்றும் விமர்சகர் ஆவார்.

கர்நாடக மாநிலத்தின் கன்னட மொழியில் கல்வி கற்பிக்க வழிவகுத்த பெருமை அவரையே சாரும். அவர் எழுதிய ‘ஸ்ரீ இராமாயண தர்ஷனம்’ என்ற நூலுக்கு ‘ஜனந்பித் விருது’ வழங்கப்பட்டது.கன்னட மாநிலத்தின் மாநில கீதமான “Jaya BharathJananiyaTanujate” வை எழுதினார். கன்னட எழுத்தாளர்களில் ‘ஜனந்பித் விருது’ பெற்ற பெருமையும் அவரையே சேரும். நவீன இந்திய இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

மேலும்,கடந்த 1988ம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1904ம் ஆண்டு, கர்நாடகா மாநிலத்தின் சிக்மங்களூர் மாவட்டத்தில் பிறந்த அவரின் 113வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க