• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏடிஎம் மையங்களில் ரூ. 50 நோட்டுகள்

November 10, 2016 தண்டோரா குழு

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டை வெளிக்கொண்டு வரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் ரூ. 500, ரூ. 1000 செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், 100 ரூபாய் நோட்டுகளுக்குத் திடீரென பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பழைய ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளை அனைத்து வங்கிக் கிளைகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

நாட்டில் உள்ள ஏ.டி.எம் மையங்கள் புதன், வியாழன் ஆகிய நாட்களில் செயல்படாமல் இருந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம். மையங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன. இதையடுத்து நாளை முதல் சில்லறைத் தட்டுப்பாட்டைத் தடுக்கும் வகையில் 50 ரூபாய் நோட்டுகள் அனைத்து ஏடிஎம்-களிலும் தாராளமாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் இருந்து 100, 50 ரூபாய் நோட்டுகளை மக்கள் எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதுவரை ஏ.டி.எம்-களில் குறைந்த தொகையாக ரூ.100 மட்டுமே எடுக்கலாம் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க