• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய தளபதிகளின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் – மனோகர் பாரீக்கர்

December 16, 2016 தண்டோரா குழு

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் புதிய தளபதிகளின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரீக்கர் கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங்கும், விமானப்படை தளபதி அருப் ராஹாவும் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இதனையடுத்து அடுத்த தளபதிகள் யார் என்பதற்கான பரிசீலனை துவங்கியுள்ளது.

இந்நிலையில் தளபதிகள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தில்லியில் பத்திரிகையாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது; ராணுவ மற்றும் விமானப்படை புதிய தளபதிகள் விரைவில் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள். இதற்கான காலக்கெடு பற்றி இப்போது கூற முடியாது.

அக்னி ஏவுகணை சோதனை நடந்து வருகிறது. இது பற்றி இப்போது கருத்து கூற முடியாது. இந்த வருடம் நடந்த ஏவுகணை சோதனை அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது என்றார்.

மேலும் படிக்க