• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

August 23, 2016 தண்டோரா குழு

சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவரும் தமிழருமான எஸ்.ஆர்.நாதன்(92) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவர் 92 வயதான நாதன். தமிழரான இவரது இயற்பெயர் செல்லப்பன். இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன் அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.

அதையடுத்து,அவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

1924ம் ஆண்டில் பிறந்த அவர் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டார். பிறகு சிங்கப்பூர் நாட்டில் சிவில் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். மேலும், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அவர் சிங்கப்பூர் அரசில் பல உயரிய பதவிகளை வகித்தார்.

கடந்த 1988ம் ஆண்டு மலேசியாவுக்கான உயர் ஆணையராகவும், 1996ல் சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராகவும் பணியாற்றினார்.அதன் பிறகு, 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சிங்கப்பூரின் அதிபராக இரு முறை பதவி வகித்தார்.

மேலும்,சிங்கப்பூர் அதிபராக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.மூன்றாவது முறையாக அதிபராகப் பதவி வகிக்க வாய்ப்புகள் வந்த போதும் அதனை ஏற்க நாதன் மறுத்துவிட்டார். அவருக்குப் பிறகு, டோனி டான் கெங் யாம் அதிபராகப் பதவியேற்றார்.

தன்னுடைய அரசியல் வாழ்வில் இருந்து விலகிப் பல கல்வி நியமனங்களைப் பெற்றார்.மேலும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ ஒரு கல்வி நிதியை உண்டாக்கினார்.ஒரு குழந்தைகள் புத்தகமும், இரண்டு வரலாற்றுக் குறிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், நாதன் இரக்கமுள்ள மற்றும் எளிதில் அணுகக்கூடிய தலைவராக இருந்தார்.அவர் உலக விவகாரங்களில் கொண்ட அதிக அறிவினால் மக்கள் அவரிடம் ஒரு தனி மரியாதையும் ஈர்ப்பும் கொண்டிருந்தனர்.அவர் சிங்கப்பூர் நாட்டின் ஒரு உண்மையான மகன் என்று அந்நாட்டின் பிரதமர் லீ தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதைக் கடந்த 2012ம் ஆண்டு எஸ்.ஆர். நாதனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க