• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யமுனா நதியில் வெள்ளப்பெருக்கு. விமானம் மூலம் மீட்கப்பட்ட கிராம மக்கள்

July 28, 2016 தண்டோரா குழு

கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வட மாநிலங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யமுனா நதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில், அரியானா மாநிலம், யமுனா நகர் மாவட்டத்தில் யமுனா நதிக்கரை அருகே உள்ள மந்தவால் கிராமத்தைச் சேர்ந்த 8 விவசாயிகள் சிக்கிக்கொண்டனர்.

வேகமாக வந்த வெள்ளநீர் அவர்கள் இருந்த நிலப்பரப்பைச் சுற்றிக்கொண்டது. வெள்ளத்தின் வேகமும் சுழற்சியும் அதிகமாக இருந்ததால், படகு மூலம் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

dd

இதையடுத்து சில மக்கள் வெள்ளம் சூழ்ந்த யமுனா நதிக்கரையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானப்படை மூலம் தவித்துக் கொண்டிருந்த 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

மேலும் படிக்க