• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியில் கர்நாடக சார்பில் 5 பேர் பங்கேற்பார்கள்- சித்தராமையா

September 28, 2016 தண்டோரா குழு

டெல்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைப்பெற உள்ள கூட்டத்தில் கர்நாடக சார்பாக 5 பேர் பங்கேற்பார்கள் என சித்தராமையா அறிவிப்பு.

காவேரி பிரச்சனை தொடர்பாக மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நாளை டெல்லியில் இரு மாநில அரசு கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து பெங்களுருவில் இன்று கார்நாடக மாநிலம் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அதில் காவேரி நீர் கர்நாடகவின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது எனவே தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது ,தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாதது ஏன் என்பது குறித்து மத்திய அமைச்சர் உமாபாரதியிடம் தெரிவிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கார்நாடக சார்பில் 5 பேர் பங்கேற்பார்கள் எனவும் இரு மாநில வழக்கறிஞர்களும் இது குறித்து பேசுவார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கார்நாடக மாநிலம் முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழகம் சார்பில் இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க