• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்ணின் உயிரை காப்பாற்றிய பேஸ்புக் லைவ்

November 22, 2017

அமெரிக்காவில் ஒரு பெண்ணை அவர் கலந்து கொண்ட பேஸ்புக் நேரலை நிகழ்ச்சி காப்பற்றியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரான்சின் சிம்ஸ் கேட்ஸ். இவர் பேஸ்புக் நேரலை மூலம் பலருடன் சேர்ந்து பிராத்தனை செய்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அருகில் அவரின் மகன் இருந்த போதும் சிறுவனுக்கு கண் தெரியாததால் உதவி செய்ய முடியவில்லை.

இந்த சம்பவத்தை பேஸ்புக் நேரலையில் பார்த்த அண்டை வீட்டுக்காரர் சிம்ஸின் மகளுக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த அவர் உடனே வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையில், அண்டை வீட்டுக்காரர் அருகிலிருந்த சுகாதார நிலையத்திற்கு தகவல் தந்துள்ளார். அங்கிருந்த மருத்துவர் ஒருவர், சிம்ஸின் வீட்டிற்கு வந்து, அவரை சோதனை செய்துள்ளார். சிம்ஸின் உடல்நிலை மோசமாக இருப்பதை கண்டு,உடனே ஆம்புலன்ஸ் மூலம் சிம்ஸை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இரத்த அழுத்தம் அதிகமானதால் அவருக்கு அடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பேஸ்புக் மூலம் தனது உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அந்த பெண் நன்றி கூறியுள்ளார். தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க