• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உவரியில் சப்பர பவனியின் போது மின்சாரம் தாக்கியதில் 4 பேர் பலியாகினர்

September 8, 2016 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் பரதர் உவரியில் மாதா கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். சப்பரம் வீதி உலா வந்த போது, தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் உரசியது. இதனால் சப்பரத்தை தாங்கிச் சென்ற பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு ஆளாகித் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், ராஜா (29), கிளைவ் (28), ராஜா (31), நிமோ (18), ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் விபத்தில் இறந்த நான்கு பேருக்கும் தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க