• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காபூலில் நில நடுக்கம், 5.3 ரிக்டர் பதிவு

November 16, 2016 தண்டோரா குழு

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் வலுவான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை மாலையில் ஏற்பட்டது. அந்நிலைநடுக்கம் 5.3 ரிக்டராகப் பதிவாகியுள்ளது.

அந்நகரை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் வட கிழக்கு மாநிலமான படக்‌ஷானில் இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டராகப் பதிவாகியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின் அறிவிப்புப்படி, ஜுர்ம் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 192.8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தொடங்கியது.

ஆனால், இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், 5.4 ரிக்டர் அளவில் காபுல் மற்றும் வேறு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டது. அதே போல் கடந்த அக்டோபர் மாதத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் ஏற்ப்பட்ட நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவு பதிவாகியது. அதில் சுமார் 115 பேர் உயிரிழந்தனர் 500 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும், அந்த நிலநடுக்கத்தால் சுமார் 4,000 வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க