November 10, 2017
துபாயில் காவல்துறையினர் எமிரேட்ஸ் விமானத்தை இழுத்து,முன்பு செய்யப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டில் ஹாங்காங் சர்வதேச விமானநிலையத்தில் 218.56 டன்எடையுடைய போயிங் 747 விமானத்தை 100 பேர் சேர்ந்து இழுத்து கின்னஸ் உலக சாதனை படைத்தனர். ஆனால், துபாய் நாட்டின் 56 காவல்துறையினர் சேர்ந்து, 302.68 டன் எடையுடைய விமானத்தை இழுத்து, முன்பு செய்யப்பட்ட கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளனர்.
இந்த சாதனையை பார்த்த, கின்னஸ் உலக சாதனை குழுவினர், மற்ற அதிகாரிகளின் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சான்றிதழை, துபாய் காவல்துறையினர் தளபதியான அப்துல்லா காளிபா அல் மெர்ரியிடம் ஒப்படைத்தனர்.