• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்கள் உள்ளிட்ட 6 பேரைக் கொலை செய்த டாக்டர் கைது

August 17, 2016 தண்டோரா குழு

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 6 பேரைக் கடத்தி கொலை செய்து அவர்களை தன் பண்ணை வீட்டில் புதைத்த மருத்துவர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் சந்தோஷ் பால். இவர் 5 பெண்கள் உள்பட 6 பேரைக் கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார்.

இதையடுத்து சந்தோஷ் பால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மேலும், மங்கள் ஜுதே என்ற பெண் புனேவில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக சதாரா என்னும் நகரில் உள்ள வொய் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் பேருந்து ஏறவில்லை. அவர் மாயமாகிவிட்டார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், போலீஸார் மங்க ஜுதேவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.மங்கள் ஜுதேவின் கைப்பேசி செயல்பாடுகளைத் தீவிரமாக போலீஸார் கண்காணித்தனர்.

அப்போது, டாக்டர். சந்தோஷ் பாலின் வீட்டில் இருந்து அந்த செல்போன் சிக்னல் வருகிறது என்பதைக் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக சந்தோஷ் பாலின் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஒருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, டாக்டர். பால், மங்கள் ஜுதேவை கடத்தி விஷ ஊசியைச் செலுத்தி அவரைக் கொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், சந்தோஷ் பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் 6 பேரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதில் கொலை செய்யப்பட்ட சிலர் கடந்த 2003ம் ஆண்டு முதல் மாயமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட 5 பெண்கள், 1 ஆண் சடலத்தை அவர் தனது பண்ணை வீட்டில் புதைத்துள்ளார்.அபாயகரமான மருந்துகளை அவர்களுக்குத் தேவைக்கு அதிகமாகக் கொடுத்து கொலை செய்ததாக சந்தோஷ் பால் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

விசாரணையின் போது செவிலியர் மற்றும் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், எதற்காக அந்த 6 பேரைக் கொலை செய்தார் என்பது குறித்த இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

மேலும் படிக்க