• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காணாமல் போன மீனவர்களை தேடும்பணி டிச.27ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது – நிர்மலா சீதாராமன்

January 18, 2018 தண்டோரா குழு

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும்பணி டிச.27ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஓக்கி புயலால் கடலில் மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமானார்கள் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ஆம் தேதியுடன் முடித்துக்கொண்டுவிட்டதாகவும்கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லைஎன்றும் கூறினார். மேலும், மீனவர்களை தேடுதல் பணியை மீண்டும் தொடங்கக் கோரி தமிழக முதலமைச்சரிடம் இருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க