• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விநோதமான திருமணம்.

July 16, 2016 தண்டோரா குழு

இன்டோரைச் சேர்ந்த ஆதித்யா திவாரி திருமணமாகாத 28 வயது மென்பொறியாளர். சராசரி இளைஞன் போலன்றி சிறிது வித்தியாசமான எண்ணங்கள் உடையவர்.

திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதுவும் ஒரு குறைபாடுள்ள குழந்தையாக இருக்கவேண்டுமென்பதும் இவரது அவா. கல்யாணமாகாதவர்களெனில் குழந்தையை தத்தெடுக்க வயது வரம்பு 30 என விதி உள்ளது.

ஆகையால் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. அதன்பின் போனவருடம் அக்டோபர் மாதம் வயது வரம்பு 25 ஆகக் குறைக்கப்பட்டது.

விதி தளர்த்தப்பட்டதால் பிறவியிலேயே குறைபாடுள்ள, மற்றும் இதயத்தில் ஓட்டை உள்ள, ஒன்றரைவயது ஆண் குழந்தையை ஓராண்டு போராட்டத்திற்குப் பின் தத்தெடுத்துள்ளார். அதற்கு அவீன்ஷ் என்ற பெயரும் சூட்டியுள்ளார்.

குழந்தையின் மருத்துவச் செலவிற்கே வருவாயின் பெரும்பகுதி கழிந்துவிடும் என்று பலர் அதைரியப்படுத்தியும் கூட, எந்தப் பெண்ணும் தன்னைத் திருமணம் செய்ய முன்வரமாட்டார் என்று எச்சரித்ததையும் பொருட்படுத்தாது குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

அவரது தீவிர வேட்டையின் பயனாக ஒரு இண்டோர் பெண்மணி திருமணத்திற்குச் சம்மதித்துள்ளார். மறுபடியும் தான் ஒரு வித்தியாசமான மனிதர் என்று நிரூபித்துள்ளார்.

அதாவது தனது திருமணத்தில் 10,000 வீடிழந்த மற்றும் அனாதைகளுக்கும், 1000 சுற்றித்திரியும் விலங்குகளுக்கும், மிருகக் காட்சி சாலையில் உள்ள பிராணிகளுக்கும், உணவு வழங்கவேண்டும் என்பதே இவரது விருப்பம்.

விருந்தாளிகளுக்குப் புத்தகங்களும், மருந்துகளும் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். திருமணநாள் நினைவாக 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிட்டுள்ளார்.

மிகமிக நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைக்கத் திட்டமிட்டுள்ளார். யாராலும் அழைக்கப்படாத மக்களாகிய அனாதைகள், ஏழைகள், வீடு வாசல் அற்றோர் ஆகியோரை அழைத்துக் கௌரவிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிறவிக் குறைபாடுகளைக் கண்டறியும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியும் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தனக்கு வரப்போகும் மனைவி தன்னைப் போலவே தன் தத்துக் குழந்தையையும் நேசிக்கவேண்டும் என்று எண்ணியதால் மனைவியைத் தேர்ந்தெடுக்க சமயம் ஆகியது என்றார்.

தனது மனைவியாக வரப்போகிறவர் தனது எண்ணத்திற்குத் துணை நிற்பார் என்பதை அறிந்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க