• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியில் கடும் பனிபொழிவு காரணமாக ரயில் சேவை பாதிப்பு

November 13, 2017 தண்டோரா குழு

டெல்லியில் கடும் பனிபொழிவு காரணமாக ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஏற்பட்ட கடும் பனிபொழிவு காரணமாக ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், புதுதில்லியிலிருந்து பிற இடங்களுக்கு செல்ல வேண்டிய 69 ரயில்கள் தாமதமாக புறப்பட்டது, மற்றும் 8 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜேந்திர நகர் -புதுதில்லி சம்பூர்ணா எக்ஸ்பிரஸ் 24 மணிநேரத்திற்கு மேலாக தாமதமாகிவிட்டது.அதேநேரத்தில் சித்தமரி-ஆனந்த் விஹார் லிச்சி எக்ஸ்பிரஸ் 25 மணிநேரத்திற்கு மேலாக தாமதமாகிவிட்டது.

புதுதில்லி-வாரணாசி மஹாணாமா எக்ஸ்பிரஸ், புதுதில்லி-அசாம்கார் கைஃபாட் எக்ஸ்பிரஸ், ஆனந்த் விஹார்-மௌ எக்ஸ்பிரஸ், ஸ்ரீகங்கநகர்-புதுதில்லிஇன்டெர்சிட்டி, புதுதில்லி-ஃபாலிலா இண்டர்சிட்டி, டெல்லி-அலீபூர்வார் மஹாநந்தா எக்ஸ்பிரஸ், மற்றும் ரக்ஸ்சுவல்-புதுடெல்லி சத்பாவானா எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடும் பனிபொழிவு காரணகமா புதுதில்லியிலிருந்து எந்தவொரு விமானமும் தாமதமாக புறப்படவில்லை.மேலும் விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என்று புதுதில்லி சர்வதேச விமானநிலையம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க