• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தில்லியில் மாசு குறை பாட்டுக்குத் தீர்வு காண உயர்நிலைக் கூட்டம்

November 2, 2016 தண்டோரா குழு

தில்லியில், அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், காற்றில் ஆபத்துக்கு உரிய வகையில் புகை மாசு கலந்துள்ளது, இதற்கு தீர்வு காண, உயர்நிலைக் கூட்டத்தை, அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூட்டினார்.

தில்லியில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், தீபாவளி பண்டிகையின் போது, பொதுமக்கள் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

இதனால், நகரின் பெரும்பகுதிகளில் அபாயகரமான அளவில், காற்றில் மாசு கலந்து, சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. சாலைகளில் புகைப் படலம் காணப்பட்டதால், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் இருந்தது.

இந்நிலையில், அனைத்துத் துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டத்தை, மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூட்டினார். இதில், மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு வசதியாக, புதிய, ‘மொபைல் ஆப்’ உருவாக்குவது என, முடிவு செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து நிருபர்களிடம் சிசோடியா, கூறுகையில், பிரச்னைக்கு தீர்வு காண, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

மேலும் படிக்க