• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி யில் காணாமல் போன மகனை தேடி 1,500 கி.மீ சைக்கிளில் பயணம் செய்த தந்தை!

December 4, 2017 தண்டோரா குழு

உ.பியில் காணாமல் போன மகனை தேடி,சைக்கிளில் சுமார் 1,5௦௦ கிலோமீட்டர் சுற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தின் ஹத்திராஸ் பகுதியை சேர்ந்த விவசாயி சதீஷ் சந்த்.இவருக்கு கோட்னா என்னும் 11 வயது மகன் உள்ளான். மாற்றுத்திறனாளியான அவர், கடந்த ஜூன் மாதம் 24, பள்ளிக்கு செல்லும் போது, காணாமல் போய்விட்டான். மாலை பள்ளியிலிருந்து மகன் திரும்பி வராததால், கவலை அடைந்த சதீஷ் சந்த், அவனை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவனை எங்கும் காணவில்லை.

இதனையடுத்து,அங்கிருந்த காவல்நிலையத்தில் சதீஷ் சந்த் புகார் அளித்தார்.ஆனால், நாட்கள் சென்றதே தவிர, காவல்நிலையத்திலிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை.இந்நிலையில், தானே மகனை தேடும் முயற்சியில் இறங்கினார்.

மேலும்,காணாமல் போன மகனின் புகைப்படத்துடன்,ஒவ்வொரு நகரத்திற்கு சைக்கிளில் பயணம் செய்து, அங்கிருந்தவர்களிடம் தனது மகனின் புகைப்படத்தை காட்டி, யாராவது அவனை பார்த்தார்களா? என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில், ஆக்ராவில், குழந்தை உரிமைகள் ஆர்வலர் நரேஷ் பராஸ், சதீஷ் சந்தை பார்த்து, அவரது நிலைமையை கேட்டு,இந்த விஷயத்தை உ.பி. டி.ஜி.பி.யின் கவனத்திற்கு நரேஷ் பராஸ் கொண்டு சென்றார்.

மேலும்,காணமல் போன தனது மகன் குறித்த செய்தி, யாராவது மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்,சதீஷ் சந்த் இதுவரை பல மாவட்டங்களில் ஏராளமான துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க