• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேராசிரியர் ரம்யா கொலை வழக்கில் நாளை தீர்ப்பு !

September 27, 2016 தண்டோரா குழு

கோவையில் பேராசிரியர் ரம்யா கொலை செய்யபட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப் படவுள்ளதாக கோவை மகளிர் நீதிமன்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த ரம்யா என்பவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3.11.2014 அன்று அவரது வீட்டில் தலையில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் அவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து தென்காசியை சேர்ந்த மகேஷ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் தென்காசியை சேர்ந்த மகேஷ் என்பவர் கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று குடிப்போதையில் ஆசிரியர் காலனி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது பேராசிரியர் ரம்யா அவ்வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது அவரது நகையை திருட வேண்டும் என்பதற்காக அவரை பின்தொடர்ந்து சென்று வீட்டின் உள்ளே நுழைந்து ரம்யாவை தாக்கியுள்ளார், தடுக்க வந்த அவரது தாயார் மாலினியையும் தாக்கியுள்ளர். இதில் சம்பவ இடத்திலேயே ரம்யா தலையில் அடிப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரியவந்தது.

இதையடுத்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் நிறைவுப்பெற்று கொலையாளி ரமேஷ் குற்றவாளி என உறுதி செய்யப்படுகிறது என நீதிபதி ராஜா அறிவித்தார். மேலும் ரமேஷ் மீது கொலைமுயற்சி,திருட்டு என ஐந்து பிரிவுகளின் கீழ் நாளை தீர்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க