• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்புக்கு மீண்டும் கட்டாயத் தேர்வு

November 15, 2016 பா.கிருஷ்ணன்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10வது வகுப்புக்கான பொதுத் தேர்வு மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. இது 2017-18ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வரும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சருடன் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, நிருபர்களிடம் சாதாரண முறையில் அவர் பேசியதாவது:

பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கினாலும், 8 ஆவது வகுப்பு, 5 ஆவது வகுப்புகளுக்கான தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.

தேர்வுகளைக் கட்டாயமாக்குவதன் முக்கிய நோக்கம் கல்வித் தரத்தை மேம்படுத்துவது, குறிப்பாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதுதான்.

ராஜஸ்தானில் பள்ளிக் கல்வித் துறையில் பல புதுமைகளைப் புகுத்தி, கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் கல்வியின் தரம் அதிகரித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களது சேர்க்கை 15 லட்சமாக உயர்ந்துள்ளது” என்றார் பிரகாஷ் ஜவடேகர்.

மேலும் படிக்க