• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய கீதம் பாடும்போது செல்பி எடுத்தவர் மீது வழக்குப்பதிவு

August 27, 2016 தண்டோரா குழு

கடந்த வாரம் புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் அரசுப் பள்ளி யில் நடைபெற்ற விழாவிற்கு முதலவர் நாராயணசாமி கலந்து கொண்டார். இவ்விழாவின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அப்போது முதல்வருடன் வந்திருந்த காங்கிரஸ் பிரமுகர் அப்துல் ரகுமான் செல்பி எடுத்தது விடியோவில் பதிவாகி ஒளிபரப்பப்பட்டது.

இதையடுத்து இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும், தேசிய கீதம் பாடப்பட்ட போது செல்பி எடுத்ததாகச் சமூக ஆர்வலர் சுந்தர் என்பவரும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, காங்கிரஸ் பிரமுகர் அப்துல் ரகுமான் மீது தேசிய கீத அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க