• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தெற்காசிய தடகள போட்டியில் கோவை வீரர் சாதனை

May 9, 2018 தண்டோரா குழு

தெற்காசிய அளவில் இலங்கையில் நடந்த தடகள போட்டியில் கோவையை சேர்ந்த கமல்ராஜ் மும்முறை தாண்டுதல் பிரிவில் புதிய சாதனையை படைத்து உள்ளார்.

இலங்கை கொழும்புவில் கடந்த நான்காம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்றாவது தெற்காசிய தடகள போட்டிகள் நடைபெற்றது.இந்தியா,நேபால், பாகிஸ்தான், மாலத் தீவுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன.

இந்த போட்டியில் பங்கேற்க இந்தியா முழுவதிலும் இருந்து 68 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு பெற்றனர்.தமிழகத்தில் இருந்து எட்டு பேர் அதில் இடம்பெற்று இருந்தனர்.இந்நிலையில் இந்திய அணி 50 பதக்கங்கள் பெற்று இருந்தது. அதில் கோவையை சேர்ந்த தடகள வீரர் கமல்ராஜ் மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.25 மீட்டர் தூரம் ஓடி புதிய சாதனையை படைத்து உள்ளார்.

இந்நிலையில்,அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டியிலும்,ஜூலை மாதம் பின்லாந்தில் நடைபெற உள்ள ஜூனியர் சர்வதேச தடகள போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்க கமல்ராஜ் தகுதி பெற்று உள்ளார்.

மேலும் படிக்க