• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

January 22, 2018 தண்டோரா குழு

திருப்பூரில் பேருந்து கட்டண உயர்வைக்கண்டித்து கல்லூரி மாணவர்கள் இன்று(ஜன 22) சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருப்பூரில் பேருந்து கட்டண உயர்வைக்கண்டித்து கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.இந்த சாலைமறியல் போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுத்ததால் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 2 தினங்களுக்கு முன் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தியது.இந்த பேருந்து கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று(ஜன 22) காலை கல்லூரிகளுக்கு செல்ல வந்த மாணவர்கள் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்களால் தொடங்கபட்ட இந்த போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுத்ததால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதனால் திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற இந்த போராட்டத்தில் திருப்பூர் வடக்கு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டத்தை கைவிடாத மாணவர்கள் புதிய பேருந்து நிலையத்தின் உட்புறம் அமர்ந்து தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டையினை 30 கி.மீ என்பதனை 60 கி.மீ ஆக மாற்ற வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க