• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

October 30, 2018 தண்டோரா குழு

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு காலமுறை ஊதியத்துக்கு பதிலாக காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.சமையலர் மற்றும் உதவியாளரை முதல்வர் காப்பீடு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கடந்த 25ம் தேதியில் இருந்து 27ந் தேதி இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதனையடுத்து இன்று இரண்டாவது நாளாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 800க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலைகளின் இருபுறமும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை 30 நிமிடங்களுக்குப் பிறகு குண்டு கட்டாக ஒரு சிலரை தூக்கி காவல் துறையினர் கைது செய்தனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.

இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் கூறுகையில்,

“தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும்,இதனால் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் மதிய உணவு இல்லாமல் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.மேலும் சுய உதவிக்குழுக்களை வைத்து மதிய உணவு தயாரித்து வருவதாகவும்,தமிழக முதலமைச்சரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்,தலைமை செயலகத்தில் அமைச்சர் தலைமையில் சத்துணவு அமைப்பின் தலைவர்கள் கலந்துகொள்ளும் பேச்சு வார்த்தையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்”.இவ்வாறு கூறினர்.

மேலும் படிக்க