• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – ஈஸ்வரன்

November 30, 2017 தண்டோரா குழு

கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவினால் உயிரிழந்த ரகுபதி குடும்பத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளார் ஈஸ்வரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“கோவையில் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளால் உயிரிழப்பு ஏற்படுத்தியுள்ளது ஆடம்பர அரசியலின் உச்சக்கட்டம்.இந்த சம்பவத்திற்கு பிறகாவது தமிழக அரசு சாலைகளில் விளம்பர பேனர்கள் வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழக அரசு,பேனர் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.ஆர்.கே.நகர். தொகுதியில் பணம் பட்டுவாடவை முழுமையாக தேர்தல் ஆணையம் தடுத்ததாக தெரியவில்லை.ஆனால், ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுக வேட்பாளர் தான் வெற்றிப்பெறுவார்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அதிக செலவில் நடத்துவதை மக்கள் விரும்புவதில்லை என்பதை ஆளுங்கட்சி புரிந்துக்கொள்ள வேண்டும்.மேலும், மலேசியா மணல் விவகாரத்தில் மேல்முறையீடு செய்யாமல், வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்”.இவ்வாறு அவர் கூறினார்

மேலும் படிக்க