• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மதுபானத்தின் தீமை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

January 29, 2018

 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து  மரக்கால் ஆட்டம் , கரகாட்டம் ஆடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அது குறித்து தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கால் ஆட்டம் மற்றும் கரகாட்டம் ஆடி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியின் போது பாட்டு பாட மதுவின் தீமை குறித்து எடுத்துரைத்தனர்.மேலும், இன்று முதல் ஒரு வாரத்திற்கு கோவை மாவட்டம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் படிக்க