• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையில் குழந்தை கடத்தல் சேலத்தில் புகார்

July 30, 2016 தண்டோரா குழு

சென்னையைச் சேர்ந்த யாஸ்மின் என்பவரின் 3 வயதுக் குழந்தையை பட்டிணம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் கடத்தியதாக சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார்.

ஆன்லைன் வியாபாரத்தில் ரவுடி ஒருவர் யாஸ்மினை நம்பி பணம் முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்தத் தொழில் விரைவில் நஷ்டமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நஷ்டத்திற்கு யாஸ்மின் தான் காரணம் என்று கூறியும் முதலீடு செய்த பணத்தை யாஸ்மின் திருப்பி வழங்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.

மேலும் யாஸ்மினின் குழந்தையை பட்டிணம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி கடந்த 1 மாதத்திற்கு முன்பு கடத்தி மறைவிடத்தில் வைத்திருப்பதாகவும் பணத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே குழந்தையை கொடுப்பதாகவும் தெரிவித்ததாக யாஸ்மின் புகார் கொடுத்துள்ளார்.

சேலத்தில் உறவினர் வீட்டுற்கு வந்த யாஸ்மின் தனது குழந்தையை மீட்டுத்தருமாறு சேலத்தில் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும் படிக்க