• Download mobile app
18 Apr 2025, FridayEdition - 3355
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்கள் யாரும் என்னைத் தவறாக நினைக்கமாட்டார்கள்- சேரன்

August 27, 2016 தண்டோரா குழு

சமீபத்தில் புதுமுக இயக்குனரான தியாவின் இயக்கத்தில் வெளியாகும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் சேரன் திருட்டு விசிடி குறித்துப் பேசும் போது, இலங்கைத் தமிழர்களுக்காக நாம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்துப் போராடியிருக்கிறோம்.

ஆனால் அதைச் சார்ந்த சில நண்பர்கள் தான் இதைச் செய்கிறார்கள் என்கிற போது, ஏண்டா இதையெல்லாம் செய்தோம் என அருவருப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது என்றார். இதற்குப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர்
சேரன் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னைப்பற்றித் தெரிந்தவர்களுக்கு நான் எதற்காகப் பேசினேன் யாரைப்பற்றிப் பேசியிருப்பேன் எனப் புரிந்திருக்கும். என்னைத் தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது. இது வரை திரையுலகில் இருந்து வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது.

ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று கதறிய போது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட அவர்களை அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை. அப்போது எங்களோட வாழ்க்கை பற்றி அவர்களுக்குக் கவலை இல்லையா என்றார்.

மேலும், உலகெங்கும் நண்பர்களைக் கொண்டு (அவர்களும் இலங்கைத் தமிழர்கள் தான்) C2H நிறுவனக்கிளைகள் தொடங்க முயன்ற போது அவர்களைத் தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான். ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு.

நல்ல குணமும் நேர்மையும் கொண்ட ஈழத்தமிழர்களுக்கும் போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும். அவர்கள் யாரும் என்னைத் தவறாக நினைக்கமாட்டார்கள் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க