• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னைக்கு எந்த இடம் ?

December 27, 2017 தண்டோரா குழு

நவீன இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இருப்பினும் அவ்வபோது பாதுக்கப்பு நடவடிக்கைகள் எடுக்கபட்டு தான் வருகிறது.

இந்நிலையில், நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பட்டியலை மத்திய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிராக மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் நகராக தலைநகர் டெல்லி உள்ளது. 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் பெண்களுக்கு எதிராக 13,808 குற்ற வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. மேலும், டெல்லியில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 182பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைபோல் நாட்டின் 6 மெட்ரோ நகரங்களில் பெண்களின் பாதுகாப்பில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. சென்னையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ளதாக மத்திய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 43 லட்சம் பெண்கள் வசிக்கும் சென்னையில் பெண்களுக்கு எதிரான 544 குற்றங்கள் வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.சென்னையில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 12பேர் தான் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க