• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை கூவம் ஆற்று கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றம்

December 7, 2017 தண்டோரா குழு

சென்னை மணவாளநகர் பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஏராளமான கடைகள் அகற்றப்பட்டது.

சென்னை திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 42 கடைகள், 302 வீடுகள் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் இன்று(டிச 7) காலை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர்.

இதில்,முதல் கட்டமாக 42 கடைகள் மட்டும் இடித்து அகற்றப்பட்டது. 302 குடும்பத்தினருக்கும் மாற்று இடம் வழங்கிய பின்னர் வீடுகள் இடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனையடுத்து
அங்கு குடியிருப்பவர்கள் பற்றிய விவரத்தை அதிகாரிகள் சேகரித்தனர்.

மேலும், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

மேலும் படிக்க