• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரத்தில் கர்நாடக எம்.பி ராஜினாமா செய்ய முடிவு

September 20, 2016 தண்டோரா குழு

காவிரி விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு 4வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் , நாளை முதல் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடவும் கர்நாடகவுக்கு உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தின் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.பி புட்டராஜூ தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும், நாளை மக்களவைத் தலைவரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க